20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது: இந்திய அணி அயர்லாந்து சென்றது

இந்தியா-அயர்லாந்து இடையிலான 20 ஓவர் ஆட்டங்கள் நாளையும், 28-ந்தேதியும் டப்ளின் நகரில் நடக்கிறது.

Update: 2022-06-25 01:22 GMT

Image Courtesy : Akshar Patel twitter @akshar2026

டப்ளின்,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் உருவாக்கப்பட்ட 2-ம் தர இந்திய அணி இரண்டு சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து அயர்லாந்துக்கு புறப்பட்டு சென்றது.

இந்தியா-அயர்லாந்து இடையிலான 20 ஓவர் ஆட்டங்கள் நாளையும், 28-ந்தேதியும் டப்ளின் நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பயிற்சி கிரிக்கெட்டில் ஆடுவதால் அவர்களுக்கு பதிலாக அயர்லாந்து தொடரில் சூர்யகுமார், சஞ்சு சாம்சன் களம் இறங்குகிறார்கள். இந்த தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்