இளையோர் கிரிக்கெட்: இந்திய அணி 431 ரன்கள் குவிப்பு

19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 501 ரன்கள் குவித்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3–வது நாளான நேற்று 8

Update: 2017-02-15 21:49 GMT

நாக்பூர்,

19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 501 ரன்கள் குவித்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3–வது நாளான நேற்று 8 விக்கெட்டுக்கு 431 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. டேரில் பெராரியோ (117 ரன்) சதம் அடித்தார். அடுத்து 70 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்