ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது புனே அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணி நிர்ணையித்துள்ளது.

Update: 2017-04-26 16:15 GMT
புனே,

10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 30-வது லீக் ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த புனே அணி  நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்மித் ஆட்டமிழக்காமல் 51 ரன்களை சேர்த்தார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது. 

மேலும் செய்திகள்