இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அன்சாரி ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 1 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 25 வயதான ஆல்–ரவுண்டர் ஜாபர் அன்சாரி கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

Update: 2017-04-26 20:32 GMT

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 1 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 25 வயதான ஆல்–ரவுண்டர் ஜாபர் அன்சாரி கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். சுர்ரே அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடி வந்த ஜாபர் அன்சாரி 2015–ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். கடந்த ஆண்டில் நடந்த வங்காளதேசம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்தார். ‘ஓய்வு முடிவு என்பது மிகவும் கடினமானது என்றாலும், தனது லட்சியமான சட்டப்படிப்பில் கவனம் செலுத்தும் நோக்கில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் முடிவை எடுத்தேன்’ என்று ஜாபர் அன்சாரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்