முதல் டெஸ்ட் போட்டியிலேயே வரலாற்று சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா

முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதிக சிக்சர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா நிகழ்த்தியுள்ளார்.

Update: 2017-07-28 08:50 GMT

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு டி20 போட்டியில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி கலேவில் கடந்த இரு தினங்களாக நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இந்தியா சார்பில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா முதல் போட்டியிலேயே அதிக சிக்சர் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இவர், 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் அரைசதம் அடித்து இந்த பெருமையை பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்