ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL

Update: 2018-04-09 14:44 GMT
ஐதாராபாத், 

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் ஐதாராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இப்போட்டியில் மோதுகின்றன.

 இதில், டாஸ் வென்ற ஐதாராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்கள் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

மேலும் செய்திகள்