பெண்கள் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

Update: 2024-05-03 02:39 GMT

Image Courtesy: @BCCIWomen

சில்ஹெட்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இரு போட்டிகள் முடிந்த நிலையில் இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக நிகர் சுல்தானா 28 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 51 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்