பள்ளி கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் அணி ‘சாம்பியன்’

பள்ளி கிரிக்கெட் போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2019-02-22 23:24 GMT
சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் செயின்ட் பேட்ரிக்ஸ்-செயின்ட் பீட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின் பேட்ரிக்ஸ் அணி 42.5 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய செயின்ட் பீட்ஸ் அணி 34.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்