கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு 3 மாதம் தடை - பிசிசிஐ
பிசிசிஐயிடம் அனுமதி பெறாமல் அபுதாபியில் நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற உத்தர பிரதேச வீரருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரிங்கு சிங் என்ற வீரர், இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். அவர், அபுதாபியில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.
இதற்கு அவர் பிசிசிஐயிடம் அனுமதி பெறவில்லை. எனவே அவருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.