ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி மீண்டும் தோல்வி

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி மீண்டும் தோல்வி அடைந்தது.

Update: 2019-12-19 23:15 GMT
திண்டுக்கல், 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-இமாச்சலபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) திண்டுக்கல் நத்தத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இமாச்சலபிரதேச அணி 158 ரன்னும், தமிழக அணி 96 ரன்னும் எடுத்தன. 62 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இமாச்சலபிரதேச அணி 52.2 ஓவர்களில் 154 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி, இமாச்சலபிரதேச வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 67.5 ஓவர்களில் 145 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இமாச்சலபிரதேச அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இமாச்சலபிரதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆகாஷ் வஷிஸ்ட் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன் ஆட்டநாயகன் விருதும் பெற்றார். தமிழக அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

மேலும் செய்திகள்