பள்ளி கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேற்றம்

பள்ளி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியது.

Update: 2019-12-29 23:24 GMT
நெல்லை,

பள்ளி அணிகளுக்கான 6-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் சென்னை லேடி ஆண்டாள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வித்யா மந்திர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் லேடி ஆண்டாள் நிர்ணயித்த 135 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வித்யா மந்திர் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்களே எடுக்க முடிந்தது. மற்றொரு அரைஇறுதியில் கோவை ராமகிருஷ்ணா பள்ளி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமியை தோற்கடித்தது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் லேடி ஆண்டாள்-ராமகிருஷ்ணா அணிகள் மோத உள்ளன.

மேலும் செய்திகள்