சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பஞ்சாப் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

மே 1-ந் தேதி நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2024-04-29 01:28 GMT

கோப்புப்படம் 

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மே 1-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேப்பாக்கத்தில் நடைபெறும் 6-வது ஆட்டம் இதுவாகும். இந்த நிலையில், சென்னை - பஞ்சாப் இடையிலான ஆட்டத்துக்குரிய டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.40 மணிக்கு தொடங்குகிறது.

PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும் ஒருநபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்