18 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட்: சென்னையில் இன்று தொடக்கம்

18 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளது.

Update: 2020-01-25 22:58 GMT
சென்னை,

புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஸ்பார்டன்ஸ், ஸ்ரீ ராகவேந்திரா உள்பட 18 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி விடுமுறை நாட்களில் நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர் வி.ஜி.லட்சுமிராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்