கிரிக்கெட்: ராமச்சந்திரா பள்ளி முதலிடம்

கிரிக்கெட் போட்டியில் ராமச்சந்திரா பள்ளி முதலிடம் பிடித்தது.

Update: 2020-02-21 22:44 GMT
சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி (14 வயதுக்கு உட்பட்டோர்) சென்னையில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன்-ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி அணிகள் மோதின. முதலில் ஆடிய நெல்லை நாடார் பள்ளி அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. பிரகதீஷ் 68 ரன்னும், சாய் சிம்ஹா ஆட்டம் இழக்காமல் 49 ரன்னும் சேர்த்தனர். ராமச்சந்திரா பள்ளி தரப்பில் அபினவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராமச்சந்திரா பள்ளி அணி 48 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அதிகபட்சமாக அபினவ் 78 ரன்னும், சரங்தார் ஆட்டம் இழக்காமல் 68 ரன்னும் எடுத்தனர்.

மேலும் செய்திகள்