பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

Update: 2020-08-31 00:45 GMT
மான்செஸ்டர்,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. கேப்டன் பாபர் அசாம் (56 ரன்), முகமது ஹபீஸ் (69 ரன்) அரைசதம் அடித்தனர்.

அடுத்து களம் இறங்கி அதிரடி காட்டிய இங்கிலாந்து 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் இயான் மோர்கன் 66 ரன்களும் (33 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), டேவிட் மாலன் 54 ரன்களும், பேர்ஸ்டோ 44 ரன்களும் விளாசினர்.

முதலாவது ஆட்டம் மழையால் ரத்தான நிலையில் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

மேலும் செய்திகள்