ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் முதலில் பந்து வீச முடிவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

Update: 2020-09-27 13:43 GMT
ஷார்ஜா,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்  கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி, பஞ்சாப்  அணி முதலில் பேட்டிங் செய்கிறது.இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், இன்று நடைபெறும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்