114- மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர்: வலைப்பயிற்சியில் மிரட்டிய டோனி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடரை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிலர் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் சென்னையில் முகாமிட்டு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
டோனி வலைப்பயிற்சியின் போது, 109 மற்றும் 114 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர்களை பறக்க விட்டு மிரள வைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டர் பக்கத்தில் டோனி இமாலய சிக்சரை பறக்க விடும் வீடியோ காட்சிகள் பகிரப்பட்டுள்ளது.
Let the whistles travel for 109, 114,......... metres! #WhistlePodu#Yellove 💛🦁 @msdhonipic.twitter.com/J7nExa0vVT
— Chennai Super Kings (@ChennaiIPL) March 20, 2021