இலங்கை பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா

இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2021-07-09 03:07 GMT
இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர் வருகிற 13-ந்ேததி கொழும்பில் தொடங்க உள்ள நிலையில் இலங்கை பயிற்சியாளர் கொரோனாவில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்