டி-20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று கடைசி ஆட்டம்: இலங்கை அணி பந்துவீச்சு

நெதர்லாந்துக்கு எதிரான கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Update: 2021-10-22 14:01 GMT
சார்ஜா,

ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இலங்கை அணி ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. மேலும் இன்று நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நமீபியா அணியும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இன்று நடைபெறும் கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து நெதர்லாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்