சச்சின் டெண்டுல்கரின் மகனை ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த மும்பை அணி

சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Update: 2022-02-13 15:41 GMT
கோப்புப்படம்

பெங்களூரு,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2-ஆம் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்றது. ஏலத்தில் கடைசி நாளான இன்று தங்களுக்கு தேவையான வீரர்களை அணிகள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்தன.  

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் மகனும், இந்திய வீரருமான அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.30 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.


மேலும் செய்திகள்