2-வது ஒருநாள் போட்டி; இலங்கை அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே..!

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Update: 2024-01-08 13:22 GMT

image courtesy; twitter/ @OfficialSLC

கொழும்பு,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன்படி கடந்த 6-ம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் கிரேக் எர்வின் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

44.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. ஜிம்பாப்வே அணி தரப்பில் அதிகபட்சமாக கிரேக் எர்வின் 82 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி தற்போது வரை 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்