சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ்..!

20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.

Update: 2022-07-16 15:41 GMT

image courtesy: TNPL twitter

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. அடுத்த கட்ட போட்டிகள் தற்போது கோவையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

திண்டுக்கல் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விஷால் வைத்யா 2 ரன்கள் மற்றும் ஹரி நிஷாந்த் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், மணி பாரத் 37 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்