சவுரவ் கங்குலியின் மனைவி டோனா கங்குலி மருத்துவமனையில் அனுமதி

டோனா கங்குலி சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-10-05 12:50 GMT

Image Instagrammed By @souravganguly

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் தலைவருமான சவுரவ் கங்குலியின் மனைவி டோனா கங்குலி. நடனக் கலைஞரான இவர் தற்போது சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள வூட்லண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டோனா கங்குலி கடந்த நான்கு நாட்களாக இருமல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் நேற்று இரவு முதல் அவரது உடல்நலக்குறைவு தீவிரமடைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் இன்று காலை முதல் டோனா கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக கங்குலியின் மூத்த சகோதரர் சினேகாசிஷ் கங்குலி தெரிவித்துள்ளார். கங்குலி தற்போது தனது குடும்ப உறுப்பினர்களோடு மருத்துவமனையில் இருப்பதாக சினேகாசிஷ் தெரிவித்தார். இவர்களது மகள் சனா கங்குலி தற்போது லண்டனில் படித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்