பெண்கள் டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

5-வது மற்றும் கடைசி டி20போட்டி இன்று நடைபெற்றது

Update: 2024-05-09 15:27 GMT

டாக்கா,

வங்காளதேசம் சுற்றுப்பயணம் சென்றுள்ள ,இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது . முதல் 4 போட்டிகளில் இந்திய பெண்கள்  அணி வெற்றி பெற்ற நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி , முதலில் களமிறங்கிய இந்திய அணி ஸ்மிரிதி மந்தனா (33), தயாளன் ஹேமலதா (37), சர்மன்ப்ரீத் கவுர் (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 156 ரன்கள் குவித்தது.

பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச வீராங்கனைகளால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 21 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று வங்காளதேசத்தை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்