ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணிக்கு 3–வது வெற்றி

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 19–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.– நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் சந்தித்தன

Update: 2017-12-08 21:30 GMT

கவுகாத்தி,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 19–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.– நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் 47–வது நிமிடத்தில் சக வீரர் உதன்டாசிங் தட்டிக்கொடுத்த பந்தை பெங்களூரு முன்னணி வீரர் மிகு, கோலாக்கினார். நடப்பு தொடரில் 50–வது கோலாக அமைந்த அதுவே அந்த அணியின் வெற்றிக்கும் வித்திட்டது.

முடிவில் பெங்களூரு எப்.சி. அணி 1–0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை தோற்கடித்து புள்ளி பட்டியலில் மறுபடியும் முதலிடத்திற்கு (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) முன்னேறியது. கவுகாத்தி அணிக்கு இது 2–வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் எப்.சி.கோவா– கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் (இரவு 8 மணி) மோதுகின்றன.

மேலும் செய்திகள்