ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?

நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் 73–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–எப்.சி. கோவா அணிகள் மல்லுகட்டுகின்றன.

Update: 2018-02-14 20:45 GMT

கோவா,

10 அணிகள் இடையிலான 4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் 73–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–எப்.சி. கோவா அணிகள் மல்லுகட்டுகின்றன.

முன்னாள் சாம்பியனான சென்னை அணி 14 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என்று 24 புள்ளிகளுடன் பட்டியலில் 4–வது இடம் வகிக்கிறது. கோவா அணி 13 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 2 டிரா, 5 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் 6–வது இடத்தில் இருக்கிறது. லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவுகளும் முக்கியமானது.

சென்னை அணி எஞ்சியுள்ள 4 லீக் ஆட்டங்களில்குறைந்தது 2–ல் வெற்றி பெற்றால் தான் அரைஇறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்த சென்னை அணி அவர்களது இடத்தில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்