ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவிடம் வீழ்ந்தது ஜாம்ஷெட்பூர்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஒடிசா அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வீழ்ந்தது.

Update: 2019-12-27 23:42 GMT
புவனேசுவரம்,

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றிரவு புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை சாய்த்தது. ஒடிசா அணியில் இரண்டு கோலையும் அரிடான் சன்டானா (28 மற்றும் 45-வது நிமிடம்) அடித்தார். உள்ளூரில் களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே வெற்றியுடன் தொடங்கி உள்ள ஒடிசா அணி மொத்தத்தில் 3 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என்று 12 புள்ளியுடன் 6-வது இடம் வகிக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு கொச்சியில் நடக்கும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்