இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல் கீப்பர் பிரசந்தா டோரா மரணம்
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல் கீப்பர் பிரசந்தா டோரா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
கொல்கத்தா,
ரத்தம் சம்பந்தமான அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல் கீப்பர் பிரசந்தா டோரா (வயது 44) நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 44. இந்திய அணிக்காக 5 ஆட்டங்களில் பங்கேற்று இருக்கும் பிரசந்தா டோரா மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் உள்ளிட்ட கிளப்புக்காகவும் ஆடியுள்ளார். உயிரிழந்த பிரசந்தா டோராவிற்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.