ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் களம் இறங்கும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடருக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது.

Update: 2021-06-09 01:07 GMT
மும்பை, 

2021-2022-ம் ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி தொடருக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது. இதன்படி ஐ.எஸ். எல். போட்டியில் எல்லா ஆட்டங்களிலும் இனிமேல் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 7 இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள். கடந்த ஆண்டு வரை 6 இந்திய வீரர்கள் களம் கண்டனர். தற்போது அந்த எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு அணியில் களம் காணும் வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 5-ல் இருந்து 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்