கொரோனா தொற்று எதிரொலி : டுரன்ட் கப் காலிறுதி போட்டியில் இருந்து விலகியது ஆர்மி ரெட் அணி .

ஆர்மி ரெட் அணியில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் ஆர்மி ரெட் அணி தொடரில் இருந்து விலகி உள்ளது .

Update: 2021-09-23 21:26 GMT
கொல்கத்தா 
 
டுரன்ட் கப் போட்டி உள்நாட்டில் நடைபெறும் கால்பந்து தொடராகும் . லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நாளை கொல்கத்தாவில் நடைபெற இருந்த காலிறுதி ஆட்டத்தில் ஆர்மி ரெட் அணியும் பெங்களூரு அணியும் போட்டியிட இருந்தன.

 இந்நிலையில் ஆர்மி ரெட் அணியில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் ஆர்மி ரெட் அணி தொடரில் இருந்து விலகி உள்ளது . 

ஆர்மி ரெட் அணி தொடரில் இருந்து விலகி உள்ள காரணத்தால் பெங்களுரு அணி அரையிறுதி ஆட்டத்திற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது .

மேலும் செய்திகள்