ஐ.எஸ்.எல் கால்பந்து: ஐதராபாத் எப்.சி அணி வெற்றி..!
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி அணி ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி சார்பில் தொங்கோசியம் 21 வது நிமிடத்திலும் ஜாதவ் 45+1 வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். பர்த்தொலொமேயு 44 வது நிமிடம் மற்றும் 74 வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார்.
இந்த நிலையில் ஐதராபாத் எப்.சி 4-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.