இந்திய கைப்பந்து சம்மேளன தலைவராக வாசுதேவன் பொறுப்பேற்றார்

இந்திய கைப்பந்து சம்மேளன தலைவராக வாசுதேவன் நேற்று பொறுப்பேற்றார்.

Update: 2018-10-17 22:30 GMT
சென்னை,

இந்திய கைப்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. தலைவராக இருந்த அவ்தேஷ்குமார் சவுத்ரி நீக்கம் செய்யப்பட்டு புதிய தலைவராக தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் எஸ்.வாசுதேவன் தேர்வு செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் கோர்ட்டு உத்தரவுபடி உடனடியாக அறிவிக்கப்படாமல் ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில் வைத்து டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்று நீக்கம் செய்யப்பட்ட தலைவர் அவ்தேஷ்குமார் சவுத்ரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர் மனு செய்தார்.

இருதரப்பு வாதங்கள் முடிந்து நீதிபதி நஜ்மி வஜிரி தீர்ப்பளித்தார். அதில், ‘இந்திய கைப்பந்து சம்மேளன தலைவராக எஸ்.வாசுதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், ராம்அவ்தார்சிங் ஜாக்கர் தலைமையில் நடந்த இந்திய கைப்பந்து சம்மேளன செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய கைப்பந்து சம்மேளன தலைவராக எஸ்.வாசுதேவன் நேற்று பொறுப்பேற்றார்.

மேலும் செய்திகள்