அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டி: மங்களூர் பல்கலைக்கழகம் வெற்றி

அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டியில், மங்களூர் பல்கலைக்கழகம் வெற்றிபெற்றது.

Update: 2019-02-27 21:30 GMT
சென்னை,

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் நெட்பால் போட்டி சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் அண்ணாமலை பல்கலைக்கழக (தமிழ்நாடு) அணி 25-16 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் பல்கலைக்கழக (சண்டிகார்) அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் மங்களூர் பல்கலைக்கழக (கர்நாடகா) அணி 31-25 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை சாய்த்தது. இதேபோல் எம்.ஜி.பல்கலைக்கழக (கேரளா) அணி 31-20 என்ற புள்ளி கணக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தையும், குருசேத்ரா பல்கலைக்கழக (அரியானா) அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தையும் வீழ்த்தின. இந்த ஆட்டங்களில் வெற்றி பெற்ற 4 அணிகளும் லீக் சுற்றுக்கு முன்னேறின.

மேலும் செய்திகள்