தேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

Update: 2019-05-20 22:15 GMT
கோவை,

கோவை பி.எஸ்.ஜி. டெக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான முதல் அரை இறுதிப்போட்டியில் கேரளா-பஞ்சாப் அணிகள் மோதின. முடிவில் கேரள அணி 74-70 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி, ராஜஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தமிழக அணி முன்னிலை வகித்தது. இறுதியில் தமிழக அணி 57-34 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தான் அணியை எளிதாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழக அணியை சேர்ந்த சத்யா 25 புள்ளிகள் குவித்தார்.

ஆண்களுக்கான முதல் அரை இறுதியில் கேரள அணி 65-62 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்