ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, சாய் பிரணீத் காலிறுதிக்கு தகுதி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் சிந்து, சாய் பிரணீத் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Update: 2019-07-25 07:26 GMT
டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இந்திய வீராங்கனை சிந்து 2வது சுற்று மகளிர் ஒற்றையர் போட்டியில் ஜப்பானின் ஒஹோரியை 11-21, 21-10, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோன்று இந்திய வீரர் சாய் பிரணீத் ஆடவர் ஒற்றையர் போட்டியில் ஜப்பானின் கன்டாவை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.  எனினும், மற்றொரு இந்திய வீரர் பிரணாய் 2வது சுற்றில் டென்மார்க்கின் கெம்கேவிடம் தோல்வி அடைந்து உள்ளார்.

மேலும் செய்திகள்