ஆசிய கைப்பந்து போட்டி: பாகிஸ்தானை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஆசிய கைப்பந்து போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Update: 2019-08-11 00:11 GMT
நய் பை டாவ்,

3-வது ஆசிய ஆண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (23 வயதுக்குட்பட்டோர்) மியான்மரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 21-25, 25-16, 25-22, 25-18 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறது. இந்திய அணி இறுதி ஆட்டத்தில் சீனதைபேயை சந்திக்கிறது.

மேலும் செய்திகள்