தேசிய ஓபன் தடகளம்: ராஞ்சியில் இன்று தொடக்கம்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஞ்சியில் இன்று தொடங்க உள்ளன.

Update: 2019-10-09 23:52 GMT
ராஞ்சி,

59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று முதல் 13-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ்சோப்ரா ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டியில் களம் காணுகிறார். முகமது அனாஸ் (400 மீட்டர் ஓட்டம்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), ஜின்சன் ஜான்சன் (800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டம்), தேஜிந்தர் பால்சிங் (குண்டு எறிதல்) டுட்டூ சந்த் (100 மீட்டர் ஓட்டம்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) ஆகிய நட்சத்திரங்களும் களம் இறங்குகிறார்கள். தமிழகத்தில் இருந்து 36 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்