சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி: 3-ந் தேதி நடக்கிறது

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி வரும் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

Update: 2019-10-30 23:39 GMT
சென்னை,

சென்னை மாவட்ட ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. இதில் 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 48 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இதில் சுமார் 1,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் இருந்து திருப்பதியில் நவம்பர் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான 17-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான சென்னை மாவட்ட அணி தேர்வு செய்யப்படும். இந்த தகவலை சென்னை மாவட்ட தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்