மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீராங்கனைகள் தேர்வு

மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கு பெற கரூர் மாவட்ட பெண்கள் கபடி அணி தேர்வு நடைபெற்றது.

Update: 2021-02-16 19:49 GMT
கரூர்
கரூர் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வித்துறை சார்பில் நேற்று கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கு பெற கரூர் மாவட்ட பெண்கள் கபடி அணி தேர்வு நடைபெற்றது. இதில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அணி தேர்வு நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் தலா 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கு பெற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்திருந்தார். இதில் கரூர் மாவட்ட கபடி சங்க செயலாளர் சேதுராமன் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்