புரோ கபடி லீக் தொடர்: 190க்கும் மேற்பட்ட வீரர்கள் ரூ.48 கோடிக்கு ஏலம்
புரோ கபடி லீக் தொடரில், 190க்கும் மேற்பட்ட வீரர்கள் ரூ.48 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
மும்பை,
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் 3 நாட்கள் நடந்தது.
இதில் மொத்தம் 190 வீரர்கள் ரூ.48.22 கோடிக்கு அணிகளால் வாங்கப்பட்டு இருக்கிறார்கள். அதிகபட்சமாக பர்தீப் நார்வால் ரூ.1.65 கோடிக்கு உ.பி.யோத்தா அணிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.