உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய பெண்கள் அணி

இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது .

Update: 2021-10-12 13:17 GMT
டென்மார்க் 

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள்  டென்மார்க்கில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.பெண்களுக்கான உபேர் கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜப்பான், இந்தியா, இந்தோனேஷியா உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. 

இந்திய பெண்கள் அணி தனது முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது  இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய பெண்கள் அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய  வீராங்கனைகள் எதிரணியின்  எழுச்சிக்கு சிறிதும்  வாய்ப்பு கொடுக்கவில்லை . இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில்  இந்தியாவின்  தனிஷா கிராஸ்டோ மற்றும் ருடபர்னா பாண்டா ஜோடி  ஸ்காட்லாந்தின் ஜூலி மேட்ச்பர்சன் மற்றும் சியாரா டோரன்ஸ் ஜோடியை  21-11 21-8 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினர்.

மற்றொரு போட்டியில் இளம் இந்திய ஜோடி ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த்  21-8 19-21 21-10 என்ற கணக்கில் கில்மோர் மற்றும் எலினோர் ஜோடியை வீழ்த்தினர்.

இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில்  ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது .

மேலும் செய்திகள்