புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ், பாட்னா அணிகள் வெற்றி

புரோ கபடி லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், பாட்னா அணிகள் வெற்றி பெற்றன.

Update: 2022-01-03 19:23 GMT
பெங்களூரு, 

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 31-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. 

மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 31-30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை சாய்த்து 4-வது வெற்றியை தனதாக்கியது. இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்-மும்பை (இரவு 7.30 மணி), உ.பி.யோத்தா-தமிழ் தலைவாஸ் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

மேலும் செய்திகள்