உலக இளையோர் டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் பாலமுருகன் 2 பதக்கம் வென்றார்

உலக டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் இளையோர் ‘கண்டன்டர்’ போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது.

Update: 2022-11-02 21:09 GMT

சென்னை,

உலக டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் இளையோர் 'கண்டன்டர்' போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 15 வயதுக்கு உட்பட்ட பிரிவின் இறுதிஆட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பாலமுருகன் 11-4, 11-13, 7-11, 6-11 என்ற செட் கணக்கில் புயர்டோரிகா வீரர் என்ரிக்ஸ் ரியாஸ்சிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

இதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவின் அரைஇறுதியில் பாலமுருகன் 7-11, 11-9, 11-5, 7-11, 11-13 என்ற செட் கணக்கில் எகிப்து வீரர் காபெர் யாசினிடம் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். பாலமுருகன் சென்னையில் உள்ள ராமன் டேபிள் டென்னிஸ் உயர் திறன் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்