இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் எலீனா ரைபகினா...!

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் எலீனா ரைபகினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Update: 2023-05-21 06:08 GMT

Image Courtesy: @WeAreTennisITA

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ரைபகினா எளிதில் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ரைபகினா முன்னிலையில் இருந்த போது அன்ஹெலினா கலினினாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

கலினினா போட்டியில் இருந்து வெளியேறிய காரணத்தால் ரைபகினா இத்தாலியன் ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்