44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் - 3-வது அணி அறிவிப்பு

Update: 2022-07-03 07:41 GMT

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3-வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் தமிழக வீரர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரு அணிகளில் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்தியா சி அணியில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் தமிழக வீரர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்