நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

Update: 2024-04-19 00:36 GMT

 

Full View


Live Updates
2024-04-19 17:39 GMT

மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம்

கள்ளக்குறிச்சி - 75.67

தர்மபுரி - 81.40

சிதம்பரம் - 74.87

பெரம்பலூர் - 74.46

நாமக்கல் - 74.29

கரூர் - 74.05

அரக்கோணம் - 73.92

ஆரணி - 73.77

சேலம் - 73.55

விழுப்புரம் - 73.49

திருவண்ணாமலை - 73.35

வேலூர் -73.04

காஞ்சிபுரம் - 72.99

கிருஷ்ணகிரி - 72.96

கடலூர் - 72.40

விருதுநகர் - 72.29

பொள்ளாச்சி - 72.22

நாகப்பட்டினம் - 72.21

திருப்பூர் - 72.02

திருவள்ளூர் - 71.87

தேனி - 71.74

மயிலாடுதுறை - 71.45

ஈரோடு - 71.42

திண்டுக்கல் - 71.37

திருச்சி - 71.20

கோயம்புத்தூர் - 71.17

நீலகிரி - 71.07

தென்காசி - 71.06

சிவகங்கை - 71.05

ராமநாதபுரம் - 71.05

தூத்துக்குடி - 70.93

திருநெல்வேலி - 70.46

கன்னியாகுமரி - 70.15

தஞ்சாவூர் - 69.82

ஸ்ரீபெரும்பதூர் - 69.79

வட சென்னை - 69.26

மதுரை - 68.98

தென் சென்னை - 67.82

மத்திய சென்னை - 67.35

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தர்மபுரி மக்களவைத்தொகுதியில் 81.40% வாக்குப்பதிவாகி உள்ளது.

2024-04-19 14:07 GMT

தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

2024-04-19 12:44 GMT

வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைப்பு

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எந்திரங்களுக்கு சீல்வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

2024-04-19 12:42 GMT

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஒருசில வாக்குச்சாவடிகளில் 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2024-04-19 12:32 GMT

தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

2024-04-19 12:22 GMT

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவிகிதம் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலரவப்படி 63.20 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

5 மணி வரையிலான மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு

தருமபுரி - 67.52%

நாமக்கல் - 67.37%

ஆரணி - 67.34%

கள்ளக்குறிச்சி - 67.23%

கரூர் - 66.91%

சிதம்பரம் - 66.64%

பெரம்பலூர் - 66.56%

திருவண்ணாமலை - 65.91%

சேலம் - 65.86%

அரக்கோணம் - 65.61%

வேலூர் - 65.12%

விழுப்புரம் - 64.83%

கிருஷ்ணகிரி - 64.65%

ஈரோடு - 64.50%

திண்டுக்கல் - 64.34%

நாகை - 64.21%

கடலூர் - 64.10%

நீலகிரி - 63.88%

விருதுநகர் - 63.85%

மயிலாடுதுறை - 63.77%

பொள்ளாச்சி - 63.53%

தேனி - 63.41%

தென்காசி - 63.10%

தூத்துக்குடி - 63.03%

ராமநாதபுரம் - 63.02%

தஞ்சாவூர் - 63.00%

கன்னியாகுமரி - 62.82%

சிவகங்கை - 62.50%

திருச்சி - 62.30%

காஞ்சிபுரம் - 61.74%

திருவள்ளூர் - 61.59%

கோவை - 61.45%

திருப்பூர் - 61.43%

திருநெல்வேலி - 61.29%

மதுரை - 60.00%

ஸ்ரீபெரும்புதூர் - 59.82%

வடசென்னை - 59.16%

மத்திய சென்னை - 57.25%

தென்சென்னை - 57.04%

மொத்த வாக்குப்பதிவு - 63.20%

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - 56.68%

2024-04-19 12:10 GMT

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவிகிதம் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலரவப்படி 63.20 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

2024-04-19 11:02 GMT

 வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்காததை கண்டித்து பல்லடம் தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வாக்குச்சாவடியை பார்வையிட பல்லடம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ் வந்துள்ளார். அப்போது எம்.எல்.ஏ. செல்வராஜ் வாக்குச்சாவடிக்குல் செல்ல வெளிமாநில போலீசார் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் அட்டையை காண்பித்தும் வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், எம்.எல்.ஏ. செல்வராஜ் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2024-04-19 10:25 GMT

3 மணி வரையிலான மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு

தருமபுரி - 57.86%

நாமக்கல் - 57.67%

கள்ளக்குறிச்சி - 57.31%

ஆரணி - 56.73%

கரூர் - 56.65%

பெரம்பலூர் - 56.34%

சேலம் - 55.53%

சிதம்பரம் - 55.23%

விழுப்புரம் - 54.43%

ஈரோடு - 54.13%

அரக்கோணம் - 53.83%

திருவண்ணாமலை - 53.72%

விருதுநகர் - 53.45%

திண்டுக்கல் - 53.43%

கிருஷ்ணகிரி - 53.34%

வேலூர் - 53.17%

பொள்ளாச்சி 53.14%

நாகை - 52.72%

தேனீ - 52.52%

நீலகிரி - 52.49%

கடலூர் - 52.13%

தஞ்சாவூர் - 52.02%

மயிலாடுதுறை - 52%

சிவகங்கை - 51.79%

தென்காசி - 51.45%

ராமநாதபுரம் - 51.16%

கன்னியாகுமரி - 51.12%

திருப்பூர் - 51.07%

திருச்சி - 50.71%

தூத்துக்குடி -50.41%

கோவை - 50.33%

காஞ்சிபுரம் - 49.94%

திருவள்ளூர் - 49.82%

திருநெல்வேலி - 48.58%

மதுரை - 47.38%

ஸ்ரீபெரும்புதூர் - 45.96%

வடசென்னை - 44.84%

தென்சென்னை - 42.10%

மத்திய சென்னை - 41.47%

மொத்த வாக்குப்பதிவு - 51.41%

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - 45.43%

2024-04-19 10:12 GMT

மாலை 3  மணி வாக்குப்பதிவு நிலவரம்

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மாலை 3 மணி நிலவரப்படி 51.41 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்