தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி

ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியர் மருத்துவமனையில் சந்திரசேகர ராவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-12-08 02:57 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரசேகர ராவ் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.




Tags:    

மேலும் செய்திகள்