நிச்சயதார்த்தம்...வாய் திறக்காத விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
ஐதராபாத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது.;
சென்னை,
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்த செய்தி மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. நேற்று வெளியான இந்த செய்தி வேகமாகப் பரவியது. ஐதராபாத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது.
மேலும், இவர்களது திருமணம் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இருவரும் இது குறித்து இன்னும் வாய் திறக்காமல் இருக்கின்றனர். இந்த செய்திகளை இதுவரை இருவரும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.