தேய்பிறை அஷ்டமி... கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள கால பைரவர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. மேலும்
நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம், மாவுருட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவில், பரமத்திவேலூரில்
தேரடி வீதியில் உள்ள வல்லப விநாயகர் ஆலய பாணலிங்க சிவ விஷ்ணு ஆலயத்தில் உள்ள மகா கால பைரவர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை, மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாயகி உடனுறை புன்னைவன நாதர் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தெற்கு முகமாக வீற்றிருக்கும் கால பைரவருக்கு உளுந்தவடை மாலை, எலுமிச்சை, வெற்றிலை மற்றும் செவ்வரளி மலரில் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ராகு கால தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.