திருப்பதி தரிசனம்.. அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்துக்கான தரிசனம் மற்றும் தங்குமிட டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டின் அட்டவணையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அர்ஜித சேவா டிக்கெட்டுகள் வருகிற 19-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.. பக்தர்கள் வருகிற 21-ந் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். இதில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டவர்கள் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 22-ந் தேதி காலை 10 மணிக்கு, கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபஅலங்கார சேவை, வருடாந்திர புஷ்பயாகம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. மெய்நிகர் சேவா டிக்கெட்டுகள் மற்றும் தொடர்புடைய தரிசன இடங்கள் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கபிரதட்சணம் டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கான டிக்கெட்டுகள் பிற்பகல் 3 மணிக்கும் வழங்கப்படும்.
ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கும், திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும்.
பக்தர்கள் தங்கள் தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை தேவஸ்தான அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.